இந்த வலைப்பதிவில் தேடு

புதன், 4 மே, 2011

2G Spectrum - Good article

மக்கள் அனைவரையும் இலவசங்களை மட்டுமே வாங்கத் தெரிந்த மாக்கள் என்றேநினைத்துவிட்டார், தமிழக முதல்வர் கருணாநிதி,
ஏழைகள் பயன்படுத்தும் அளவுக்கு குறைந்த விலையில் சேவையை கொண்டுவந்தது முன்னாள்மத்தியத் தொலைத் தொடர்பு அமைச்சர் ஆ.ராசாவா? விலை குறைந்தன் காரணம் இதுவே...

கடந்த 1999 ஆண்டில் தான் தொலைத்தொடர்பு உரிமங்கள் வழங்க ஆரம்பிக்கபட்டது. அன்றுவெறும் பணம் படைத்தவர்கள் மட்டுமே கைபேசியை பயன்படுத்தினர். எனவே நுகர்வோரின்எண்ணிக்கை மிக குறைவு. சில பல லட்சங்கள் மட்டுமே. தொழில்நுட்ப வளமான 1G அல்லது 2Gஅலைக்கற்றைகள் மிக அதிக அளவில் அரசிடம் கையிருப்பு இருந்துள்ளது. ஆனால், உரிமம்வாங்க உலக அளவிலோ இந்திய அளவிலோ போட்டிகள் இல்லை.
விலை கொடுத்து அலைக்கற்றை உரிமம் வாங்கியவர்கள் லாபம் பெற, நுகர்வோரிடம்நிமிடத்துக்கு அதிக கட்டணம் (In coming and out going ) வசூல் செய்ய வேண்டியகட்டாயம் ஏற்பட்டது. இதில் கவனிக்க வேண்டிய இன்னொரு விஷயம் என்னவென்றால், நாம்தான் வசதி படைத்தவர்களாச்சே என்று இஷ்டத்துக்கு பேசி நேரத்தையோ பணத்தையோ அன்றையவசதி படைத்தவர்கள் விரயம் செய்யவில்லை. குறைவான நேரத்துக்குதான் கைபேசியைபயன்படுத்தினர்.


செல்பேசி நுகர்வோரின் எண்ணிக்கை குறைவாக இருந்ததால்தான் அன்று அலைகற்றை உரிமம்பெற அதிக நிறுவனங்கள் முன்வரவில்லை. இதை சரிசெய்ய அன்றைய அரசு ஒரு தொலைத்தொடர்பு புரட்சியை உருவாக்க முயன்றது. அதன் விளைவாகவே நாளுக்கு நாள்நுகர்வோரின் எண்ணிக்கை அதிகமானது. இன்றும் அதிகமாகி கொண்டே இருக்கிறது.
2010 செல்பேசி பயன்படுத்துவோரின் எண்ணிக்கை சுமார் 60 கோடிக்கும் மேல். 2008-ல்50 கோடிக்கும் மேல். இதற்கும் அதிகமான மக்கள் பயன்படுத்தும் அளவுக்கு போதியஅலைகற்றைகள் அரசிடம் இன்றும் உள்ளன. ஆனால் பயன்படுத்துவோரின் எண்ணிக்கை வெறும் 60கோடிதான். 122 தகுதி இல்லாத நிறுவனங்களுக்கு உரிமம் வழங்கபட்டுள்ளது.
தகுதி என்றால் என்ன? போதிய அனுபவம், வங்கி காசோலை, வங்கி செக்யூரிட்டி டெபொசிட்அது மட்டும் இல்லை - வாங்கியவுடன் குறிப்பிட்ட காலத்துக்குள் சேவையை தொடங்கவேண்டும். (இந்தக் குறிப்பை நினைவில் வைத்து கொள்ளுங்கள். பின்னால் உதவும்)டாட்டா, ரிலையன்ஸ் போன்ற பெரிய நிறுவனங்களும் உரிமம் வாங்கியுள்ளனர். இதோடுஅந்த 122 தகுதி இல்லாத நிறுவனங்களையும் சேர்த்து கொள்ளுங்கள்.
நியாய கணக்கு...
இந்தியாவில் 60 கோடி பேர் கைபேசி சேவையை பயன்படுத்துவதாக உண்மை தகவல் உள்ளது.ஒரு நபர் தனது கைபேசியை ஒரு நாளைக்கு சராசரியாக வெறும் 15 நிமிடங்கள் (LOCALCALLS ONLY) பயன்படுத்துவதாக வைத்துக்கொள்வோம். ஒரு நிமிடத்துக்கு 40 பைசாகட்டணம். அப்படியென்றால், 15 x 0.40 = 6.0 ரூபாய், ஒரு கைபேசியின் மூலம்செலவாகிறது. 60 கோடி கைபேசிகள். 60x 6.0 = 360 கோடிகள் ஒரு நாளைக்குசெலவாகிறது. ஒரு மாதத்துக்கு 30 x 360 = 10,800 கோடிகள். ஒருவருடத்துக்கு 12x10,800= 1,29,600 கோடிகள். 2008-ல் 2G ஏலம் விடப்பட்டது. இன்று வரை இரண்டு வருடங்கள்ஆகிறது. அப்படியெனில், குறைந்தபட்ச வருமானம் இன்று வரை ரூ. 2,59,200 கோடிகள்.இது ஒரு நாளைக்கு வெறும் 15 நிமிடங்கள் கைபேசியை பயன்படுத்தினால், இரண்டுவருடத்துக்கு கிடைத்திருக்கும் வருமானம். இதோடு SMS, MMS, STD, ISD, சேவைகட்டணம், இணைப்பு கட்டணம்... இன்னும் என்னென்னவோ கட்டணங்கள் உள்ளது என்றுசொல்கிறார்கள். அத்துடன், 15 நிமிடத்துக்கு அதிகமாக பயன்படுத்துவோரின்செலவையும் சேர்த்தால் எத்தனை கோடி கோடிகள் வருமானமாக கிடைக்கும் என்பதை நீங்களேகணக்கிட்டு கொள்ளுங்கள். என்னிடம் உள்ள கால்குலேட்டர் மற்றும் கணினிகாண்பிப்பது, "INFINITIVE".
இந்த வருமானம் அனைத்தும் அரசுக்கு கிடைத்திருக்க வேண்டும். அது மக்களை சென்றுஅடைந்து இருக்க வேண்டும். கிடைத்ததா? மக்களை சென்றடைந்ததா? நிச்சயம் இல்லைஎன்றுதான் ஒவ்வொருவரும் கூறவேண்டும். அப்படி என்றால் இந்த மக்கள் பணம்சட்டத்துக்கு புறம்பாக யாரிடமோ சென்று அடைந்துள்ளது. இந்த ஊழல் பணம் அடுத்த சிலஆண்டுகளில் தனது சொந்தநாட்டு மக்களையே தாக்கப்போகிறது. எப்படி..?
விலைவாசி உயரும். பொருளாதாரம் சீர்குலையும். "Above middle Class" மக்கள்நடுத்தர மக்களாகவும், நடுத்தர மக்கள் ஏழைகளாகவும், ஏழை மக்கள் இன்னும்ஏழைகளாகவும் மாறுவார்கள். ஜனநாயகம் வேரோடு அழியும். மனிதாபிமானம், மனிதநேயம்மண்ணோடு மண்ணாகும். ரௌடிசம், குற்றச் சம்பவங்கள் தலைவிரித்து ஆடும். கடந்தஐந்தாண்டுகளாக ஆயுள் கைதியாக உள்ள நடுநிலை பத்திரிகைகள், இனி மரண தண்டனைகைதிகளாக மாற்றப்பட்டு தூக்கில் போடப்படும்.
துரோகம் - 1
உரிமம் வாங்கிய அனைத்து நிறுவனங்களும் சுமார் ரூ.13,000 கோடிக்கும் அதிகம்
மதிப்புள்ள (உதாரணம் S.TEL <http://s.tel/> நிறுவனம் ரூ.13000 கோடிக்கு வாங்க
முன்வந்தது) அலைகற்றைகள் உரிமத்தை அடிமாட்டு விலைக்கு அதாவது 1200, 1300,1650 கோடிகளுக்குதிட்டமிட்டு விற்கப்பட்டுள்ளது. அரசுக்கு சேர வேண்டிய, மக்களுக்கு சேர வேண்டியவருவாய் சில சுய நலவாதிகளை சென்றடைந்துள்ளது.
துரோகம் - 2
பெரும்பாலான நிறுவனங்கள் தங்கள் உரிமத்தின் பங்குகளை வெளிநாட்டுநிறுவனங்களுக்கு விற்று கொள்ளை லாபம் பார்த்துள்ளனர். இதனால் அரசுக்கு அதாவதுபல கோடி மக்களுக்கு கிடைக்க வேண்டிய அரசின் வருவாய் சில சுய நல தனி மனிதர்களைசென்று அடைந்துள்ளது.
துரோகம் - 3
தகுதி இல்லாமல் உரிமம் வாங்கிய 122 நிறுவங்களில் பெரும்பாலான நிறுவனங்கள்இன்னும் சேவையை தொடங்கவில்லை. இதில் "swan, Unitech" போன்ற லெட்டர் பேட்நிறுவனங்களும் அடங்கும். இந்த நிறுவனகள் ஏன் இன்னும் சேவையை தொடங்கவில்லை என்றுஉள்ளூர ஆராய்ந்தால் மிக தெளிவாக புரியும். பெரிய நிறுவனங்கள் போட்டி இல்லாமல்தொலைதொடர்பு துறையில் கொள்ளை லாபம் பார்க்க, அதாவது கட்டணம் என்ற பெயரில் மக்களின்உழைப்பை சுரண்ட பெரும்பாலான தகுதி இல்லாத பினாமி லெட்டர் பேட் நிறுவனங்கள்இன்னும் சேவையை தொடங்கவில்லை. இவை சேவையை தொடங்கி இருந்தால் சந்தையில் போட்டிஅதிகமாகி கைபேசியில் பேசும் கட்டணம் இப்போது இருப்பதை விட மேலும்
குறைந்திருக்கும். ஒரு வேளை இதற்காகத்தான் திட்டமிட்டு "S.TEL <http://s.tel/>"

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக